Total Pageviews

Thursday, April 12, 2012

பசும்பொன் தேவரின் எழுச்சியுரை கேளுங்கள்


http://www.youtube.com/watch?v=mTZDogaPw5E&context=C34abac9ADOEgsToPDskK0H-ndkA6aI-s62NUFb3i_

ஆங்கிலேய மனோபாவம்
மவுண்ட் பேட்டன் பிரபு
காங்கிரஸ்
வெள்ளையர் வரலாறு பாரத தமிழர் வரலாறாக
ஆகஸ்ட் புரட்சி
புதிய ஆட்சி சதி
துரோகம்
அரசாட்சி யார் செய்ய வேண்டும்
படித்தவன் நிலை
வீரன் நிலை
மெய்ஞானி யார்
அவலட்சணம்
அகிம்சை யார் பேசலாம்
கோழைத்தனம் எப்போது மாலை போட்டுக்கொள்ளலாம்
மகாத்மா யார்
ஞானி யார்
திருவள்ளுவர் அரசியல்
மதம் வாழ சதி
காட்டிகொடுத்தது - சீக்கியர் துரோகம்
கும்பெனியார் ஆட்சி
குதிரை 1:சுதேசிகளை பிரிக்க சூழ்ச்சி
குதிரை 2: காங்கிரஸ் - உண்மையில் சுதந்திர விதை போட்டவர்கள் யார்
குதிரை 3: மெசபடோமியா சண்டைக்கு அகிம்சாவதி செல்வது - பஞ்சாப் படுகொலை பரிசு
அகிம்சாவாதிகளின் ரத்தம்
உலக அரசியல் - யுத்தம்
குதிரை 4: இந்திய அரசு - மஞ்சள் பெட்டி தேர்தல்
மக்கள் அகிம்சைக்கு தயாராக இல்லை
இந்திய ராணுவம் முன்னேற்றம்
இந்திய சேனையின் வீரம்
வேவல் திட்டம்
ஜின்னா - முஸ்லிம் பிரதிநிதித்துவம்
அகிம்சை - சந்தர்ப்பவாதம்
வீரமுமில்லை சாதுவாகவுமில்லை
ராணுவ பட்ஜெட் எதற்க்காக
பாதுகாப்பு மந்திரி
காமராஜ் - முத்தையா செட்டியார் - கிருஷ்ணாமாச்சாரி - பதவி
1930ன் வீரம் 1957ல் காண்கிறேன்
சிம்லா செக்ரட்ரியெட்
பாகிஸ்தான்
எப்படியும் பிழைத்தால் போதும் என்ற சர்க்கார்
திரைமறைவு நாடகம்
தமிழ் மாகாண தரித்திரம்
துரோகியுடன் கூட்டணி - காட்டிக்கொடுத்த கம்யூனிஸ்டுடன்
போராளிகளை கூலிகள் என்றதால்
ராஜாஜி தேவர் பிரிவினால் காமராஜர் தலைவரா?
பின்னர் காமராஜர் ஏன்?
தாயும் மறுத்த காலம்
நீதிக்கட்சிக்கு எதிராக
காமராஜரை கொலை செய்ய
லட்ச லட்சமாக செலவு செய்தவர்களின் நாடார்களின் அன்றைய செயல்
ஏன் ஊமையானேன்
தகப்பனாரே எதிரியாக
காமராஜர் ஜாதிப்பற்று
எல்லா வழக்குகளிலும் முதல் எதிரி
உங்களைவிட வெள்ளைக்காரன் ஆயிரம் மடங்கு நல்லவன்
கொன்று எரித்த அவலம்

THANX : தனியன்.

Thursday, March 29, 2012

ஜெயலலிதாவுக்கு கனவிலும் துரோகம் நினைத்ததில்லை: சசிகலா திடீர் அறிக்கை-ஜெயா டிவியில் 'பிளாஷ்'!

 
 
 
jayalalitha sasikalaa
ஜெயலலிதாவுக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் எனக்கும் எதிரிகளே, என்று திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார் சசிகலா. இந்த அறிக்கையால் பரபரப்பு எழுந்துள்ளது.
 
முதல்வர் ஜெயலலிதாவின் 'உடன்பிறவா சகோதரி' சசிகலா நடராஜன் கடந்த டிசம்பர் மாதம் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி அவரும் அவரது உறவினர்கள் மொத்தபேரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தும் சசிகலா மற்றும் உறவினர்களை வெளியேற்றினார் ஜெயலலிதா.
 
கடந்த சில மாதங்களாக சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்கள் ராவணன், திவாகரன் உள்பட பலர் புதுப்புது வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். திமுகவினருக்காகவே அறிமுகமான நில அபகரிப்பு வழக்குகள், சசிகலா வகையறா மீதும் பாய்ந்தன. அவர்கள் அனைவரும் தற்போது ஜெயிலில் உள்ளனர்.
 
பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகி இப்போது பதிலளித்து வருகிறார் சசிகலா. இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
 
அந்த அறிக்கை:
 
கடந்த மூன்று மாத காலமாக பலதரப்பட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
 
1984-ம் ஆண்டில் முதன் முதலாக அக்காவை (முதல்வர் ஜெயலலிதா) நான் சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னை தனது தங்கையாக ஏற்றுக் கொண்டார்.
 
1988-ம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன். அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இரவு-பகல் என பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவிற்காவது குறைக்கும் வகையில் அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை.
 
போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவிற்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியவில்லை.
 
24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நான், கடந்த டிசம்பர் மாதம் அக்காவை பிரிந்து, அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தன.
 
கடந்த டிசம்பர் மாதம் அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான், அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது.
 
என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.
 
இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்று வரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவிற்குத் துரோகம் நினைத்ததில்லை.
 
என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவிற்கு எதிரான நடவடிக் கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.
 
இவ்வாறு அக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவிற்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.
 
என்னைப் பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை.
 
பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவிற்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவிற்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா கூறியுள்ளார்.
 
ஜெயா டிவியில் பிளாஷ்:
 
சசிகலா வெளியிட்ட அறிக்கை, ஜெயா செய்தி சேனலில் இன்று காலை ஃப்ளாஷ் நியூஸாக வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாலும் போயஸ் கார்டனின் கட்டுப்பாட்டில் தான் சசிகலா இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
 
ஜெயா டிவியிலும் இந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தால்,
சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கப்படுவதற்கான முன்னோட்டமாகவே இந்த அறிக்கை பார்க்கப்படுகிறது.

Tuesday, March 20, 2012

சங்கரன் கோவிலில் தேவரின பாதுகாப்பு பேரவை

 

சங்கரன்கோவில் தேவரின பாதுகாப்பு பேரவைத் தலைவர் திரு .ந .பசும்பொன்பாண்டியன் அவர்களின் பூர்வீகம் என்பதாலும் இடைதேர்தலில் அப்பகுதி மக்களின் எண்ணங்கள் என என்பதனை அறிய வேண்டியும் ,இந்த இடை தேர்தல் நேரத்தில் இரட்டை மலை சீனிவாசனுக்கு ம் வைகுண்டருக்கும்
அரசு விழா பொதுவிடுமுறை அறிவித்த அ.தி .மு .க .அரசினை, இந்திய சுதந்திர போரில் வீர முழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட முதல் சுதந்திர போரட்ட வீரர் நெற்கட்டான் பாளையக்காரன் பூலித்தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்படவேண்டும்,மேலும் அவருக்கு சென்னையில் பிரமாண்டமான சிலை நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது என்ற மதுரை செயற்குழுவின் முடிவின்படி கடந்த மூன்றாம் தேதி சங்கரன் கோவிலில் கலந்தாய்வு கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மற்றும் தேர்தல் கமிசன் அனுமதி ஆகியவற்றை முன்னரே வாங்கியும் காவல் துறை மேற்படி கூட்டம் நடத்துவதற்கு மிகுந்த தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது .


தேவரின பாதுகாப்பு பேரவையினர் தங்கிஇருந்த வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட இருமங்குளம் கோவில் மண்டபத்திற்கு கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி காலை வந்த காவல் துறை அதிகாரிகள் அமைப்பு நிர்வாகிகள் மூன்று நபர்களை கைது செய்திருக்கின்றனர் ,மேலும் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களை "மரியாதையாக மண்டபத்தை காலி செய்துவிட்டு ஓடிவிடுங்கள் இல்லாவிட்டால் நடப்பதே வேறு " என்று அப்பட்டமாக மிரட்டியுள்ளார்கள். " தொகுதிக்கு வெளியே தங்கி இருக்கும் எங்களை மிரட்டுகிறீர்கள்,சங்கரன்கோவிலில் தங்கி இருப்பவர்கள் அனைவரும் உள்ளூர் ஆட்களா? என்று தேவரின பாதுகாப்பு பேரவையினர் கேட்டவுடன் நிர்வாகிகள் மூன்று பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். பின்பு மறுநாள் பெரியகொவிலான்குளம் என்ற ஊரில் தேவரின மக்களை சந்தித்தபோது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவர்கள் கார்கள் இரண்டை பறிமுதல் செய்துள்ளனர். தேவரின பாதுகாப்பு பேரவையினர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்று கூறியும் அதனை ஏற்க மறுத்திருக்கின்றனர் ,இருந்தாலும் அவர்கள் மனம்தளராமல் பல கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்திருக்கின்றனர் . அதிகாரிகள் அனைவரும் "நீங்கள் யாருக்கு ஆதரவு தரபோகிறீர்கள் என்பதனை சொல்லுங்கள் என்று கட்டயாபடுத்தியும் , கலந்தாய்வு கூட்டத்தில் எமது மக்களின் கருத்துகளை கேட்டுத்தான்,முடிவினை,அறிவிப்போம் என்று உறுதியாக கூறியுள்ளனர். இறுதியில் மூன்றாம் தேதி காலை பதினோரு மணியளவில் மாலை கூட்டத்தை ரத்து செய்தார்கள் ,ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி இடத்தை மாற்றி வேறு இடத்தில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதன்பிறகு தேவரின பாதுகாப்பு பேரவை அ.இ.அ.தி.மு.க விற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. அ .தி .மு .க அரசினை வலியுறுத்தி இந்திய சுதந்திர போரில் வீர முழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட முதல் சுதந்திர போரட்ட வீரர் நெற்கட்டான் பாளையக்காரன் பூலித்தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்படவேண்டும் , அவருக்கு சென்னையில் பிரமாண்டமான சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து களப்பணியும் செய்துள்ளது. இந்த ஆதரவு நிலைக்கு, கோரிக்கைக்கு அ .தி .மு .க அரசு எப்போது பதிலளிக்கப் போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-

Sunday, March 18, 2012

தமிழாய்வின் தற்காலநிலை.

 
 
இன்றைய தமிழாய்வு எதை நோக்கிச் செல்கிறது ?
வளர்ச்சியையா?அழிவையா?
பட்டத்தையா? பணத்தையா?

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவது போலவும் குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போலவும் தமிழ் தமிழாய்வாளர்களிடம் சிக்கிக் கொண்டு பாடாய் படுகிறது.
இன்றைய தமிழாய்வு குறித்து கவிஞர் வைரமுத்து
குறிப்பிடும் போது

 பெரும்பாலும் ஆய்வுகள் இங்கே மேற்கோள் நிரப்பிய வைக்கோல்கள்

 கம்பராமாயணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களைத் தேடிக்கொண்டிருக்கும் இலக்கணப் புலிகள்

 அகநானூற்றில் மார்க்ஸியம் தேடிக்கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள்.

 மதுரை வீதியில் கண்ணகி திருகி எறிந்ததைத் தேடிக்கொண்டிருக்கும் கசாப்புக்கடைக்காரர்கள்.

 சித்தர் பாடல்களில் உள்ளார்ந்த ஒளியை மறந்துவிட்டு அதன் சத்தங்களை ஆராய்ச்சி செய்யும் சப்தப் பித்தர்கள்.

 ஓர் ஆராய்ச்சி என்பது அலசிப்பார்த்து முடிவு சொல்ல வேண்டாமா?

 விடியாத தமிழ்நாட்டில் வெளிச்சம் கொளுத்த வேண்டாமா?

 இதை விட்டு விட்டு 'மன்னன்;' என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனைமுறை பயின்று வந்தது?

 மலைநாட்டு மயில் எத்தனை முறை ஆடியது?

 சங்ககாலக் குரங்கு எத்தனை பழம் தின்று கொட்டை போட்டது?
இவையெல்லாம் ஆராய்ச்சிகளே இல்லை என்று மனம் நொந்து குறிப்பிடுகிறார்.இன்றைய தமிழாய்வை எண்ணும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் …………… என்றுதான் தோன்றுகிறது.

இன்றைய சூழலில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் செய்யப்படும் ஆய்வேடுகள் வணிகமயமாகிவிட்டன.

ஆம் ஐய்ந்தாயிரம் ரூபாய்க்கு எம்பில் ஆய்வேடுகளும்

பத்தாயிரம் ரூபாய்க்கு முனைவர் பட்ட ஆய்வேடுகளும் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

அன்றைய சூழலில் உ.வே.சாமிநாதையர் போன்ற கல்விப்புலம் சாராத ஆய்வாளர்கள் பலரும் எந்தப்பட்டங்களை எதிர்பார்த்தும் தமிழாய்வு செய்யவில்லை ஆனால் இன்று கல்விப்புலம் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகளின் நிலை மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளது.


Friday, March 9, 2012

காமெடி படங்களே ஜெயிக்கும் - நடிகர் விவேக்

 

புதுமுகங்களை வைத்து டி.எஸ். திவாகர் இயக்கும் கஞ்சா கூட்டம் படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. காமெடி நடிகர் விவேக் இதில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழ் பேசும் தமிழச்சிகள் கஞ்சா கூட்டம் படத்தில் நாயகிகளாக நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கு. கதாநாயகர்களும் நம்ம மண்ணுக்காரங்கதான். அவர்களை எல்லோரும் உற்சாகப்படுத்தனும். சின்னதா ஆரம்பிச்ச படங்கள் பெரிய லெவலுக்கு போய் வசூலை கொட்டி இருக்கு. நிறைய செலவு செய்து எடுத்த படங்கள் கீழே விழுந்திருக்கு.

எனவே புதுமுகங்கள் நடிச்ச படம்னு எதையும் ஒதுக்க முடியாது. திறமை எங்கிருந்தாலும் வரவேற்பது தமிழன் பண்பு. எந்த மொழி, எந்த இனம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் பாராட்டுவான். முன்பெல்லாம் ஒரு படத்தை 4 தியேட்டரில் திரையிட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள். இப்ப ஒரு படத்தை 100 தியேட்டரில் திரையிட்டு 4 நாட்கள் ஓட்டுறாங்க.

சினிமா ரேஸ்மாதிரி அது சுத்திக்கிட்டே இருக்கனும் 50-வது நாள் வெள்ளி விழா 100-வது நாள் விழா என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி கொண்டாடனும் அப்ப தான் சினிமா செழிப்பா இருக்கும். இன்றைக்கு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஹிட்டாகும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெறாது என்றும் சொல்ல முடியாது.

நல்ல கதையும், காமெடியும் இருந்தால் படம் ஜெயிச் சிடும். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி அதுபோல் இன்னொரு மறைமுக சூப்பர் ஸ்டாரும் இருக்கார். அதுதான் திருவாளர். நகைச்சுவை, காமெடி படத்தில் இருந்தால் கண்டிப்பாக ஹிட்டாகும். சினிமாவில் கஷ்டப்பட்டா நிச்சயம் ஜெயிக்கலாம். ஏ.வி.எம். ஸ்டூடியோ வாசலில் சுற்றிக் கொண்டிருக்கிற உருண்டையை பார்த்து நாம் இந்த ஸ்டூடியோவுக்குள் நுழைய முடியுமா என்று ஏங்கியவர் பாலச்சந்தர் அவர்தான் தாதா சாகேப் பால்கே அவார்டை பெற்றார். எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தளராமல் தொடர்ந்து போராடினால் சினிமாவில் ஜெயிக்கலாம். இ

வ்வாறு அவர் பேசினார்.

Tuesday, March 6, 2012

அ.தி.மு.க விற்கு தேவரின பாதுகாப்பு பேரவை ஆதரவு

 

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் : அ.தி.மு.க விற்கு தேவரின பாதுகாப்பு பேரவை ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேவரின பாதுகாப்பு பேரவை தலைவர் திரு நா.பசும்பொன் பாண்டியன் அவர்கள் கூறியது.

" எதிர்வரும் 18-3-2012 அன்று நடைபெறவுள்ள சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. சங்கரன் கோவில் தொகுதியில் ஒட்டுமொத்த மக்களும் அ.தி.மு.க விற்கு ஆதரவான நிலையை கொண்டுள்ளனர். தற்போதைய சூழலில் அ.தி.மு.க விற்கு எங்களது முழு ஆதரவையும் வழங்க வேண்டுமென்று எங்களது கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Monday, March 5, 2012

கார்த்திக் மகனுக்கு பயிற்சி அளிக்கும் அர்ஜுன்


பொதுவாக ஒரு நடிகரின் படத்தில் மற்றொரு நடிகர் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்கே அதிகமாக அலட்டிக் கொள்ளும் இந்த காலத்தில், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதமிற்கு உடற் பயிற்சி அளித்து வருகிறார் அர்ஜுன்.
மணி ரத்னம் இயக்கும் கடல் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் கௌதம். இவருக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான அனைத்து பயிற்சிகளையும் அளித்து, தனக்கு அடுத்தபடியாக, கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் கூடிய அடுத்த ஹீரோவை உருவாக்கித் தந்துள்ளார் நடிகர் அர்ஜுன். அர்ஜுனும் கடல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்குக் கீழ் பயிற்சி எடுத்துக் கொள்ளும்படி நான் கௌதமை அறிவுறுத்தினேன். அதற்கான பலன் கிடைத்துவிட்டது. தற்போது நல்ல எடை போட்டு, கட்டுக்கோப்பான உடலமைப்புடன் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார் என்கிறார் அர்ஜுன் பெருமையுடன்.

JUNIOR VIKATAN ARTICLE - NAVAMANI AYYA , KATHIRAVAN SIR

 
 
 


Sunday, March 4, 2012

AINMK

 
 

Wednesday, February 29, 2012

நாங்கள் தேவர் சிலை வைக்கின்றோம்! நீங்கள் அம்பேத்கர் சிலையை வையுங்கள்!

 

மதுரை : ஒரு சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் முக்குலத்தோர் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவரோடு பரமக்குடி இம்மானுவேல் பேரவையினர் சந்திப்பு நடந்திருக்கின்றது. அந்த சந்திப்பில் " நாங்கள் பசும்பொன் தேவரின் சிலையை பரமக்குடி பகுதியில் வைத்து வழிபட ஏற்பாடு செய்கின்றோம் எனவும் , நீங்கள் அம்பேத்கர் சிலையை மதுரைப் பகுதியில் வைக்க ஏற்பாடு செய்ய
வேண்டும் " எனவும் ஒரு கோரிக்கையை வைத்ததாக தகவல் கிடைத்தது. ஆனால் அதை என்னால் செய்ய இயலாது என்று பட்டென்று பேசி அனுப்பி விட்டாராம் மதுரை முக்குலத்தோர் கட்சித் தலைவர்.
நாங்கள் சாதியை மறந்து சமத்துவம் காண முயற்சி செய்வதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சாதியில் விடாப்பிடியாக இருக்கின்றார்கள் என்ற கருத்து அவர்கள் பேரவை தொடர்பானவர்களிடம் பரவிக்கிடக்கிறது .
" நான் புளி தருகிறேன் , நீ மிளகாய் கொடு என்ற பண்ட மாற்று முறைபோல இப்போது இந்த சிலை விவகாரத்தை கொண்டு வருகின்றார்கள். எக்குலமும், எல்லா மதத்தினரும் போற்றி பாராட்டி வணங்கும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக யார் வேண்டுமானாலும் பாதுகாப்பான முறையில் சிலைகளை வைப்பதில் நாங்கள் தலையிடப் போவதில்லை. ஆனால் அதற்காக நாங்கள் இதை செய்யும் பொழுது நீங்கள் அதை செய்ய வேண்டும் என்பது பிரதிபலன் கருதி ஒரு நல்ல காரியம் செய்தலை விட செய்யாதிருத்தல் சிறப்பு" என்று மதுரை முக்குலத்தோர் அமைப்பின் நிர்வாகிகளிடையே பேச்சு அடிபடுகிறது.
எப்படியோ, தேவரின் புகழ் அறிந்து , அவரின் தெய்வீக சக்தி அறிந்து அவரின் ஆசிர்வாதத்தில் இந்த உலகம் பலனடைய விரும்புவோர் , இல்ல வழிபாட்டினாலும் , கோவில் கட்டி வழிபடுதலினாலும் தனது விருப்பத்தை நிறைவேற்றுதல் என்பது வரவேற்கத் தக்கதே!


THANX : DEVARTV.COM

Dhansika and Senthil Unveils Karthika Car Showroom

 

Check out Actress Dhansika & Senthil Unveils Karthika Car Showroom Photos. Exclusive pictures images gallery of Dhansika and Senthil Unveils Karthika Car Showroom.

Dhansika and Senthil Unveils Karthika Car Showroom
Dhansika and Senthil Unveils Karthika Car Showroom
Dhansika and Senthil Unveils Karthika Car Showroom
Dhansika and Senthil Unveils Karthika Car Showroom
Dhansika and Senthil Unveils Karthika Car Showroom
Dhansika and Senthil Unveils Karthika Car Showroom



View article...

Monday, February 20, 2012

தேவர் பேரவையினர் (இளைஞர் அணி ) காவல்துறையினரோடு தள்ளு முள்ளு.30 பேர் கைது - thevar peravai _ madurai airport _ 19/02/2012

 

இன்று காலை தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணியினர் மேற்கொண்ட மதுரை விமான நிலைய முற்றுகையால் விமான நிலைய வளாகமே போர்க்களம்போல காட்சியளித்தது.
காவல்துறைக்கு முன்னறிவிப்பு செய்யாமலேயே போராட்டத்தை நிகழ்த்தியமையால் காவல்துறையினர் திணறிப் போயினர். இது தொடர்பாக தேவர் பேரவை இளைஞர் அணி பொதுச்செயலாளர் திரு பசும்பொன் முத்தையா தேவர் அவர்கள் அளித்த செய்தி :
" மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை வைக்க கோரி தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி சார்பில் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை செவி சாய்க்காத மத்திய அரசின் இந்த செயல் தேவர் மக்களின் மனதை புண்படுத்திய செயலாகும்.

தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி சார்பில் கடந்த 23.10.2011 அன்று இதே கோரிக்கைக்காக மதுரை விமான நிலையத்தை என் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்ற வகையில் இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தியிருகின்றோம் . இதற்கு மேலும் தாமதிப்பின் தமிழகம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இதப் போராட்டத்தில் : வி.பி.தேவன் , ஆர், தேவராஜ், எஸ்.செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் ஜி.சீனு , ராமு, லட்சுமணன், கே.பழனிச்சாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

THANX : DEVARTV.COM

Saturday, February 18, 2012

தேவர் திருமகன் மகிமை என்று பூரிக்கும் தம்பதியினர்.

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது தேசியமும் , தெய்வீகமும் ஆகும். தன்னுடைய இளமைக் காலம் தொட்டே ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தேவர் பின்னாளில் முருகப் பெருமானின் அவதாரமாக கருதப்பட்டு
அனைத்து மக்களாலும் வழிபடப் பட்டார். சித்த ஞானத்தால் பறவைகளோடும், விலங்குகளோடும் தன்னுடைய சிந்தனைகளை பரிமாறிக்கொள்ளும் வரம் பெற்றிருந்த தேவர் பெருமகனார் ஒட்டுமொத்த உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதையே அனைவருக்கும் போதித்தார். மக்களோடு மக்களாக தன்னுடைய வாழ்வை கழித்தபோதும் அவரின் தெய்வ அனுகூலங்களை அறிந்த மக்கள் தொடர்ந்து அவரது கோவிலுக்கு சென்று வழிபடுதல் , வேண்டுதல் செய்தல் , நேற்றிக்கடன் செலுத்துதல் , மொட்டையடித்தல் , பால் கொடம் எடுத்தல், முளைப்பாரி போடுதல் என்ற வழிபாடுகள் நீளும்.
தேவர் திருமகனார் அவதரித்ததும் , மறைந்ததும் ஒரே தினமாதலால் அக்டோபர் முப்பது அன்று தேவர் கோவிலில் லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி தரிசிக்க வருவார்கள். அப்படி அங்கே வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை முன்வைத்து செல்வார்கள். பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை முடித்த பிறகும் எட்டு வருடங்களாக குழந்தை பேறின்மை என்ற நிலையில் இருந்த தம்பதியினர் 2010 ம் வருடம் நடந்த குருபூஜை அன்று தனது வேண்டுதலை நிறைவேற்றுமாறும், அப்படி பிறந்தால் அந்த குழந்தைக்கு உங்கள் பெயர் வைத்து உங்களுக்காக தொண்டாற்ற அற்பணிக்க தயாராக வுள்ளேன் என்றும் வேண்டிக் கொண்டாராம். அடுத்த நாற்பதாவது நாளில் நான் கருத்தரித்தேன் என்று கூறிய சீதா மேலும் கூறுகையில் எங்களை பரிசோதித்த மருத்துவர்கள் நான் கருத்தரித்தது நம்பும்படியான நிகழ்வில்லை என்பதால் திரும்பவும் சோதித்து உறுதிசெய்த ஒன்பதாவது மாதத்தில் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சென்ற குருபூஜை அன்று பெயர் வைக்கப்பட்டது. முத்துராமலிங்கம் என்ற பெயரால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். எவ்வளவு அழுகையானாலும் தனது கழுத்தில் கிடக்கும் தேவர் செயின் காண்பித்தால் உற்று நோக்கியபடி சிரித்து விடுவார்" என்று மெய் சிலிர்க்க பேசிப்போனார்கள்.

THANX : DEVARTV.COM

Sunday, February 12, 2012

பசும்பொன் தேவர் திருமகனாரின் எழுச்சியுரை

 
 
"பல மறைக்கப்பட்ட உண்மைகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு (அரசியலை மட்டும்) பதியும் எண்ணம் உண்டு. விரைவில் செய்வோம்." என்று சொல்லியிருந்தேன். அன்றைய சூழ்நிலைகளை பசும்பொன் தேவர் திருமகனாரின், அவர்களே விளக்கும் மதுரை தமுக்கம் "ஜனநாயக காங்கிரஸ் மாநாடு" பேச்சு உங்களுக்கு இன்றும் உண்மையின் உரைகல்லாக இருப்பது அதை கேட்கும் போது புரியவரும். நம் நாடு நடந்து வந்த பாதை பற்றிய தெளிவு கிடைக்கும்.

இன்றும் ஏன் காங்கிரசும், பாரத நாட்டு அரசியலும், பொருளாதாராமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது? அதன் மூலம் என்ன? எப்படி எல்லாம் அதற்கு அன்றே சதி செய்யப்பட்டது? அதன் உலக அரசியல் என்ன? அன்றைய தலைவர்களின் கோழைத்தனமான துரோகம் என்ன? வீரியங்கள் எல்லாம் எப்படி இரண்டாம் பட்சமாக ஆக்கப்பட்டது? இன்றும் பாகிஸ்தானில், இலங்கையில், முல்லைபெரியாரில், கூடங்குளத்தில் அதற்கான எதிரொலி என்ன? என்பதை அரசியம் தெரிந்தவர்கள் பசும்பொன் தேவர் திருமகனின் பேச்சை கேட்கும்போது மேலும் புரிந்து கொண்டு தெளிவு சேர்த்து கொள்ளமுடியும்..

அவர் பேசிய அந்த உலக, பாரத, தமிழக அரசியல் வீரிய பேச்சின் சாரம் என்னவென்றால்

ஆங்கிலேய மனோபாவம்
மவுண்ட் பேட்டன் பிரபு
காங்கிரஸ்
வெள்ளையர் வரலாறு பாரத தமிழர் வரலாறாக
ஆகஸ்ட் புரட்சி
புதிய ஆட்சி சதி
துரோகம்
அரசாட்சி யார் செய்ய வேண்டும்
படித்தவன் நிலை
வீரன் நிலை
மெய்ஞானி யார்
அவலட்சணம்
அகிம்சை யார் பேசலாம்
கோழைத்தனம் எப்போது மாலை போட்டுக்கொள்ளலாம்
மகாத்மா யார்
ஞானி யார்
திருவள்ளுவர் அரசியல்
மதம் வாழ சதி
காட்டிகொடுத்தது - சீக்கியர் துரோகம்
கும்பெனியார் ஆட்சி
குதிரை 1:சுதேசிகளை பிரிக்க சூழ்ச்சி
குதிரை 2: காங்கிரஸ் - உண்மையில் சுதந்திர விதை போட்டவர்கள் யார்
குதிரை 3: மெசபடோமியா சண்டைக்கு அகிம்சாவதி செல்வது - பஞ்சாப் படுகொலை பரிசு
அகிம்சாவாதிகளின் ரத்தம்
உலக அரசியல் - யுத்தம்
குதிரை 4: இந்திய அரசு - மஞ்சள் பெட்டி தேர்தல்
மக்கள் அகிம்சைக்கு தயாராக இல்லை
இந்திய ராணுவம் முன்னேற்றம்
இந்திய சேனையின் வீரம்
வேவல் திட்டம்
ஜின்னா - முஸ்லிம் பிரதிநிதித்துவம்
அகிம்சை - சந்தர்ப்பவாதம்
வீரமுமில்லை சாதுவாகவுமில்லை
ராணுவ பட்ஜெட் எதற்க்காக
பாதுகாப்பு மந்திரி
காமராஜ் - முத்தையா செட்டியார் - கிருஷ்ணாமாச்சாரி - பதவி
1930ன் வீரம் 1957ல் காண்கிறேன்
சிம்லா செக்ரட்ரியெட்
பாகிஸ்தான்
எப்படியும் பிழைத்தால் போதும் என்ற சர்க்கார்
திரைமறைவு நாடகம்
தமிழ் மாகாண தரித்திரம்
துரோகியுடன் கூட்டணி - காட்டிக்கொடுத்த கம்யூனிஸ்டுடன்
போராளிகளை கூலிகள் என்றதால்
ராஜாஜி தேவர் பிரிவினால் காமராஜர் தலைவரா?
பின்னர் காமராஜர் ஏன்?
தாயும் மறுத்த காலம்
நீதிக்கட்சிக்கு எதிராக
காமராஜரை கொலை செய்ய
லட்ச லட்சமாக செலவு செய்தவர்களின் நாடார்களின் செயல்
ஏன் ஊமையானேன்
தகப்பனாரே எதிரியாக
காமராஜர் ஜாதிப்பற்று
எல்லா வழக்குகளிலும் முதல் எதிரி
உங்களைவிட வெள்ளைக்காரன் ஆயிரம் மடங்கு நல்லவன்
கொன்று எரித்த அவலம்

Thursday, February 9, 2012

சசிகலா நீக்கத்தால் "ஜாதி பிரச்னையை' சீண்டும் தி.மு.க.,: ஜெ., மீது மட்டுமே விசுவாசம்

 

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வுக்கு முக்குலத்தோர் ஓட்டுகள் பாதிக்கும் என்பது போன்ற பிரமையை சிலர் ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் கூறுகின்றனர்.

தமிழக அளவில், 1960களில், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என்ற நிலையை, தி.மு.க., ஏற்படுத்தியது. இதற்கு மாற்றாக, அ.தி.மு.க., உருவான பின், எம்.ஜி.ஆர்., காலம் தொட்டு, முக்குலத்தோர் அதிகமுள்ள தென் மாவட்டங்கள், மதுரை, தேனி, பெரியகுளம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், அ.தி.மு.க., மிகப்பெரிய அடித்தளத்தை ஏற்படுத்தியது. கள்ளர், மறவர், அகமுடையாரின் ஆதரவு, அ.தி.மு.க.,வுக்குத்தான் என கருதப்பட்டது. பிற கட்சிகளில் அவர்கள் இருந்தாலும், அ.தி.மு.க., மீது அச்சாயம் பூசப்பட்டது.சசிகலா குடும்பத்தினர் வரவு, தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் சம்பவம் போன்ற காரணங்களால், 1996ல் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது.அதற்கேற்ப, முக்குலத்தோர் அதிகம் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை, பெரியகுளம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் நடக்கும் முக்குலத்தோர் விழாக்களில் அவ்வப்போது சசிகலாவின் கணவர் நடராஜன் தலைகாட்டியும், விளம்பரங்கள் மூலமும் முன்னிறுத்தப்பட்டார். அ.தி.மு.க.,வால் நடராஜன் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், விழாக்களில் அவர் தலைகாட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களிடையே, அ.தி.மு.க., மீது சிறு வெறுப்பை ஏற்படுத்தியது.தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் ஆதரவு கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோர், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாலும், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் ஜாதிய பிரச்னைகள் பெரிய அளவில் இல்லாததாலும், அ.தி.மு.க., மீதான முக்குலத்தோர் சாயம் பெரும்பாலும் கரைந்தோடிவிட்டது.இச்சூழலில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் முழுமையாக நீக்கப்பட்டதால், அக்கட்சிக்கு முக்குலத்தோரின் ஓட்டுகள் பாதிக்கும் என்ற கருத்து பரப்பப்படுகிறது.

இதுபற்றி, தென் மாவட்டத்தில் தேவர் அமைப்பில் முக்கிய பொறுப்பில் செயல்படும், பெயர் வெளியிட விரும்பாதவர் கூறியதாவது:

ஆரம்பத்தில் அ.தி.மு.க., என்றால், எம்.ஜி.ஆர்.,தான். அதன்பின், ஜெயலலிதா தான். சசிகலா அல்ல; சசிகலா வரவால், எங்களுக்கு ஒரு பலம் வந்ததாக நாங்கள் கருதினோம். பெரிய கட்சியில், பெரிய பொறுப்பில் உள்ளவருடன் சசிகலா, அவரது குடும்பத்தார் உள்ளதால், அவர்கள் எங்கள் பகுதிக்கு வரும்போது, அவர்களை வரவேற்பதை கவுரவமாக நினைத்தோம்.சசிகலா நீக்கப்பட்டது எங்களுக்கு சற்று வருத்தம்தான். அதற்காக, அ.தி.மு.க.,வையோ, ஜெயலலிதாவையோ நாங்கள் வெறுக்கவில்லை. சசிகலா எங்கள் உறவினர் என்றாலும், ஜெயலலிதாவுக்கு நாங்கள் விசுவாசிகள். ஜெயலலிதா பின்னால்தான் முக்குலத்தோர் சமுதாயம் நிற்கும்.சசிகலா, நடராஜன், தினகரன் மட்டுமின்றி, முன்பு கருப்பசாமிபாண்டியன், தற்போது ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் போன்றோர் முக்குலத்தோராக இருந்தாலும், மறவர், கள்ளர், அகமுடையார் என்ற சமூகத்துக்காக எதையும் அவர்கள் செய்யவில்லை. சசிகலா, நடராஜன், தினகரன் போன்றோர் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் வளர்த்துக் கொண்டனர். எங்கள் சமூக பலத்தை, தங்களுக்கான பாதுகாப்பாக கருதினர். கருப்பசாமி பாண்டியன், நயினார் நாகேந்திரன், பன்னீர்செல்வம் போன்றோர், கட்சியில் தாங்கள் வளரவும், தங்களுக்கு பின்னால் முக்குலத்தோர் உள்ளனர் என்பதை காண்பித்து பதவிகளை பெற்றனர்.

முக்குலத்தோர் விழாக்களில் இவர்கள் பங்கேற்று இருக்கலாம். குலத்துக்காக, குலத்தின் ஒதுக்கீடு, படிப்பு, முன்னேற்றம், கல்வி நிறுவனங்கள், பண ரீதியான உதவி என ஏதும் செய்யவில்லை. ஜாதிய மோதலில், வழக்குகளில் நாங்கள் சிக்கியபோது எங்களை பார்த்தது கூட இல்லை.கொடியங்குளம் சம்பவத்தின்போது, எங்களுக்கு பலமாக இருந்தது, அ.தி.மு.க.,வும், ஜெயலலிதாவும்தான். சசிகலா, நடராஜன் போன்றோர் வந்து கூட பார்க்கவில்லை. அச்சம்பவத்துக்குமுன், யார் என்றே தெரியாத நிலையில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி, அந்த ஒரே சம்பவத்தால், ஒட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ.,வானார். தென்காசி எம்.பி., தொகுதியில் அதிகளவில் ஓட்டு பெற்றார். அதற்குக்காரணம், அச்சம்பவத்தின்போது அவர் அம்மக்களுடன் இருந்தார்.அதுபோல, முக்குலத்தோருடன் தென் மாவட்டம், சோழ மண்டலத்தில் யாரும் இருக்கவில்லை. எனவே, எங்கள் சமுதாயமும், ஓட்டுகளும் ஜெயலலிதா பின்னால்தான் செல்லும்.தற்போதைய சூழலில் இதுபோன்ற ஜாதிய பிரச்னையை, தி.மு.க.,வினர் எழுப்பி வருகின்றனர். அ.தி.மு.க.,வுக்கு எதிராக அது திரும்பும் என எண்ணுகின்றனர். சசிகலா, நடராஜன், தி.மு.க., என அனைவரையும் நாங்கள் அறிந்ததால், நாங்கள் ஜெயலலிதா பக்கம் உள்ளோம். எப்போது தேர்தல் வைத்தாலும், அது வெளிப்படும்.எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தென் மாவட்டம், சோழ மண்டலம், மதுரை, தேனிப்பகுதியில் உள்ளவர்கள். அவர்களிடம் பேசியபோது, இதே கருத்தைத்தான் அவர்களும் தெரிவித்தனர்.சசிகலா, நடராஜன் போன்ற பல பெயரைக்கூறி, பலர் பதவி பெற்றனர். உண்மையான அ.தி.மு.க., விசுவாசிகள் இன்றும் தொண்டனாகவே இருக்கின்றனர். அவர்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வருகிறார் எஸ்.ஜே.சூர்யா

 

வாலி, குஷி உள்பட சில படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அந்த படங்களுக்குப்பிறகு கள்வணின் காதலி, வியாபாரி, நியூ, அஆ ஆகிய படங்களில் கதாநாயகனாகவும நடித்தார். ஆனால் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் அவரது மார்க்கெட் கவிழ்ந்து போனது. இப்போது ஷங்கர் இயக்கியுள்ள நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த சூட்டோடு மீண்டும் தனது மார்க்கெட்டை உயர்த்த, ஒரு படத்தை தானே இயக்கி நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதோடு இந்த படத்திற்கு அவரே இசையும் அமைக்கிறார். தற்போது அப்படத்துக்கான லேட்டஸ்ட் மெட்டுக்களை உருவாக்கி வருகிறார் அவர்.

பசும்பொன்னில் " சுய மரியாதை உணவு" ?

 

"உலக வரலாற்றில் ஒரு புனிதருக்கு ஒரே நாளில் எவரது அழைப்பும் இன்றி பலலட்சம் மக்களை வரவழைக்கும் சக்தியை உடைய பசும்பொன் முருகன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கோவில் அமைந்துள்ள பசும்பொன்னில் சோறு அரசியல் செய்யும் சிலரது போக்கை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு வரும் ஆண்டு அங்கே ' சுய மரியாதை உணவகம்" ஒன்றை அமைக்க உள்ளோம். அதற்கான இடம் பசும்பொன்னில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒருலட்சம் பேருக்கு அன்னதானம் என்ற வாசகத்தை மட்டுமே பெரிதாக்கி வெறும் சோற்றுக்கு கூடும் கூட்டமாக தேவரினத்தை காட்டி சாப்பிட வரும் கூட்டத்தை படமெடுத்து அரசியல் வியாபாரம் செய்யும் போக்கினை தடுக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மண்ணாசை , பொன்னாசை, பெண்ணாசை துறந்த தெய்வீக திருமகன் மண்ணில் பெண்களை வைத்து குத்தாட்டம் போடவைக்கும் சிலரது புத்திக்கு தக்க பாடத்தை தேவரின இளையோர்கள் காட்ட வேண்டும். இந்த " சுய மரியாதை உணவகத்தில் " இரண்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உணவுகள் விற்கப்படும். இந்த உணவுகள் தாய் புலிகள் இயக்கத்தினரின் மேற்பார்வையிலும் "தேவர் கோவில் பக்த குழு சுவாமிகள் " முழு ஒத்துழைப்போடும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த சுய மரியாதை உணவகத்தில் பங்கெடுக்க விரும்புவோர்கள் உங்கள் விவரத்தினை "thevarist@gmail.com" என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் தகவலையும் கருத்துக்களையும் தெரிவிக்கவும்.

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன் வருத்தம்

 

தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும்; இல்லையென்றால் உங்களை வீழ்த்தும். நீங்கள், "முடிவெடு' என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது. "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!' இவ்வாறு நடராஜன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்தார்.

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.

பாரதிராஜாவின் துணிச்சல்

 

காலம்காலமாக முதலாளி வர்க்கம்தான் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியை முடிவு செய்வார்கள். ஆனால் சினிமா உலகில் அப்படியல்ல, தொழிலாளர்கள்தான் தங்களது கூலியை நிர்ணயிக்கிறார்கள். அதோடு எங்களுக்கு இந்த அளவு சம்பளம் தர வேண்டும் இல்லையேல் படப்பிடிப்பே நடத்த முடியாது என்றும் மிரட்டல் விடுக்கிறார்கள். அதோடு மட்டுமா? ஒரு படத்துக்கு தேவையான தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளவும் தயாரிப்பாளர்களுக்கு உரிமை இல்லை. கண்டிப்பாக இத்தனை தொழிலாளர்களை தேவையே இல்லையென்றாலும் அழைத்து செல்ல வேண்டும். உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். இதெல்லாம் நீண்டகாலமாக பெப்சி அமைப்பு என்கிற பெயரில் தமிழ்த்திரையுலகில் நடந்து வரும் ஒரு அமைப்பின் அதிகாரம்.

இத்தனை காலமும் பல்லைக்கடித்துக்கொண்டு சகித்து வந்த தயாரிப்பாளர் சங்கம் தற்போது விழித்துக்கொண்டுள்ளது. வீட்டை அடமானம் வைத்து, சொத்துக்களை விற்று நாங்கள் படமெடுக்கிறோம். லாப நஷ்டங்களுக்கு நாங்களே பொறுப்பு ஏற்கிறோம். அதோடு மட்டுமின்றி உலகில் எந்த தொழிலாளர்களுக்கும் இல்லாத வகையில் மூன்று வேளையும் சாப்பாடு தருகிறோம். இப்படி தேவையானதை செய்து வேலை கொடுத்தால் எங்களை மிரட்டுவதா? என்று சிலிர்த்தெழுந்து விட்டனர்.

இந்த விசயத்தை பொறுத்தவரையில் , நேற்று கூடிய தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி முடிவு காரணமாக பெப்சி அமைப்பானது கடும் அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது. காரணம், இனி பெப்சிக்கும், எங்களுக்குமிடையேயான ஒப்பந்தம் தொடராது. நாங்கள் விருப்பம் போல் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக்கொள்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் அறுபது சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு மிரட்டி வந்த பெப்சி அமைப்பும் இன்று கூடியுள்ளது. இதில் இதுசம்ப்நதமான தாங்கள் நீதிமன்றத்தை நாடுவதாக அவர்கள் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் எந்தமிரட்டலுக்கும் அஞ்சாத பாரதிராஜா, அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பை பெப்சி தொழிலாளர்கள் இலலாமல், தனக்கு தேவையான நபர்களை வைத்து அழகாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். பாரதிராஜாவின் இந்த துணிச்சல் இபபோது மேலும் சில தயாரிப்பாளர்களுக்கும் வரத தொடங்கியிருக்கிறது.

தலைமுறைகண்ட வைரமுத்து

 

1982ல் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை எழுதியவர் வைரமுத்து. அந்த படத்தில் அறிமுகமானவர்கள்தான் கார்த்திக்-ராதா ஆகிய இருவரும். ஆனால் இப்போது அதே ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலும் பாடல் எழுதியிருக்கிறார் வைரமுத்து.

இது சினிமாவைப்பொறுத்தவரை இது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும். இதனால் இந்த படத்துக்கு பாடல் எழுதும்போது தான் பெருமையாகவும், அதிக உற்சாகமாகவும் எழுதியதாக சொல்கிறார் வைரமுத்து. அதோடு இப்போது கார்த்திகா நடிககும் படத்துக்கு பாட்டெழுதிய நான், அடுத்து அவர் மகள் நடிக்கும் படத்துக்கும் பாட்டெழுத வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்கிறார் அவர்.

முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் மகன் திருமணம்: கருணாநிதி - மத்திய மந்திரிகள் வாழ்த்து

 

முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் - ஜெயந்தி தம்பதியின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் சென்னை நொளம்பூரை சேர்ந்த தொழிலதிபர் சார்லஸ்மோகன் - சி.ஷீலா தம்பதியின் மகள் உதயா என்கிற டாக்டர் சி.ராகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் திருமணம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மங்கள நாணை கருணாநிதி எடுத்து கொடுக்க அதை மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் தொட்டு ஆசிர் வகித்தனர்.

இதையடுத்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மண விழாவில் கருணாநிதி பேசியதாவது:-

மாநகரத்தை விட்டு வானகரம் வரும் வழியிலே கொடிகளையும் வாழ்த்து விளம்பர பலகைகளையும் நான் வியந்து பார்த்தேன். அதில் இருந்து இது மணவிழாவா அல்லது மாநாடா என்று வியந்தேன்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் திருநாவுக்கரசர் எதை செய்தாலும் சிறப்பாக செய்வார். தமிழக துணை சபாநாயகராக இருந்தார். மத்திய மந்திரி பதவிகளையும் வகித்தனர். இப்பவும் எல்லா நிலைகளிலும் தன்னிலை மாறாமல் செயல்படுபவர் திருநாவுக்கரசர்.

எனக்கு இருக்கும் மிக சிறந்த நண்பர்களில் இவரும் ஒருவர். இந்த திருமண விழாவில் நான் கண்டது புதுமையானது. புரோகிதர் வைத்து நடக்கும் திருமணமா? பெரியார், அண்ணா வழியில் நடக்கும் திருமணமா? என்று எண்ணிப் பார்த்தேன். கலப்பு திருமணம் கூட வேறுபாடுகளை களைந்து நடக்கும். மனம் ஒன்றுபட்டு நெஞ்சம் ஒன்றுபட்டு நடக்கும் திருமணமாக இது அமைந்துள்ளது. மணமக்கள் எதிலும் மனம் தளராமல் எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கருணாநிதி பேசினார்.

திருமண விழாவில் முன்னாள் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி, பா.ஜனதா தலைவர்கள் வெங்கையாநாயுடு, இல.கணேசன், சி.பி.ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், கராத்தே தியாகராஜன், கவிஞர் காசி முத்து மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரபாண்டியன், முரளி, நாங்குநேரி ஒன்றிய தலைவர் லக்கான், வாஞ்சிநாதன், வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசையா, நடிகர் ரஜினிகாந்த், மத்திய இணை மந்திரி நாராயணசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக இணை வேந்தர் எம். ஏ.எம்.ராமசாமி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Tuesday, January 3, 2012

ஜல்லிக்கட்டு வீரர்கள் மதுரையில் ஊர்வலம்


மதுரை :ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான டெபாசிட் பணத்தை அரசு ஏற்க வலியுறுத்தி மதுரையில் மாடுபிடிவீரர்கள் ஊர்வலம் சென்றனர். ஜல்லிக்கட்டு விளையாட்டை சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளுடன் நடத்த அரசு அனுமதித்துள்ளது. நிகழ்ச்சியை நடத்துவோர், டெபாசிட் ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும். மாடுகளை பிராணிகள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மதுரை உட்பட சுற்றியுள்ள ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஆர்வலர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர். தெப்பக்குளத்திலிருந்து வீரவிளையாட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலம் வந்து மனு கொடுத்தனர்.
அவர்கள் கூறுகையில், ""டெபாசிட் ரூ. 2 லட்சத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அரசு ஏற்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் பட்டியலில் 5 கிராமங்கள் உள்ளன. 37 கிராமங்களில் நிகழ்ச்சி நடக்கிறது.
அனைத்து ஊர்கள் மட்டுமின்றி பிறமாவட்டங்களிலும் நடத்த அனுமதிக்க வேண்டும். காளைகளை பிராணிகள் நல வாரியத்தில பதிவு செய்வதில் உள்ள சட்ட சிக்கல் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

Sunday, January 1, 2012

எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்கள் எடுத்த தேவர்

 

'கொங்கு நாட்டுத் தங்கம்' படத்தை அடுத்து, 'தாய் சொல்லைத் தட்டாதே' என்ற படத்தைத் தயாரிக்க சின்னப்பா தேவர் திட்டமிட்டார். அதற்கான கதை -வசனத்தை ஆரூர்தாஸ் எழுதி முடித்துவிட்டார்.
இந்தப் படத்திற்கான பாடல்கள், சாரதாஸ் ஸ்டூடியோவில் பதிவாகிக் கொண்டிருந்தன. தேவர் அங்கே இருந்தார்.


அப்போது ஒரு படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆர். அங்கே வந்தார். தேவரும், எம்.ஜி.ஆரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரும் ஒரு கணநேரம் திகைத்து நின்றனர். பின்னர் கட்டித்தழுவிக் கொண்டனர். சுமார் 4 ஆண்டுகள் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.

தேவர் பிலிம்ஸ் படங்களில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதித்தார். 'தாய் சொல்லை தட்டாதே' படத்தில் எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவியையும் நடிக்க வைக்க தேவர் தீர்மானித்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, கதை- வசனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

'தாய் சொல்லை தட்டாதே' படம் ஒரே மாதத்தில் தயாராகியது. 7-11-1961-ல் வெளியான இப்படம் நூறு நாள் ஓடியது. இதை அடுத்து 'தாயைக் காத்த தனயன்' படத்தை தேவர் தயாரித்தார். இந்தப் படத்திலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி நடித்தார். இந்தப்படம் 20 நாட்களில் தயாராகி வெற்றி பெற்றது.

பின்னர் குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் வெற்றிப் படங்களை எடுத்தவர் என்ற பெயர் தேவருக்கு கிடைத்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த 16 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்தவர் தேவர்தான்.

குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்தது, எம்.ஜி.ஆருக்கும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியது. 'நாடோடி மன்னன்' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, எம்.ஜி.ஆரை நெருங்கவே பட அதிபர்கள் பயந்தனர். இனி எம்.ஜி. ஆர். பிரமாண்டமான படங்களில்தான் நடிப்பார். அவரேதான் டைரக்ட் செய்வார்' என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

இதை பொய்யாக்க, குறைந்த பட்ஜெட் படத்திலும் நடிக்கலாம் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். நடிகை மாலினி நடித்த 'சபாஷ் மாப்பிள்ளே' என்ற படத்தில் நடித்தார். அந்தப்படமும், அதன் பிறகு நடித்த 'மாடப்புறா' என்ற படமும் சரியாக ஓடவில்லை.

இந்த சமயத்தில்தான் தேவருடன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டு, தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்கலானார். அவை குறைந்த செலவில், குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றன.

இதன் காரணமாக, 'எம்.ஜி.ஆர். குறித்த காலத்தில் படத்தை முடிக்க பட அதிபருக்கு ஒத்துழைப்பார்' என்ற பெயர் பரவியது. பட அதிபர்களுக்கு எம்.ஜி.ஆர். ஒத்துழைப்பு தருவதில்லை என்ற வதந்தி பொய்யாகியது.

கோடம்பாக்கத்தில் தொடங்கப்படும் படக்கம்பெனிகளில் பெரும்பாலானவை, பூஜை போடுவதோடு சரி; சில கம்பெனிகள், பாதி படத்தோடு, பணத்தட்டுப்பாடு காரணமாக கம்பெனியை மூடிவிடுவார்கள். சிலர், படம் ரிலீஸ் ஆன பிறகும், நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை கொடுக்கமாட்டார்கள்.

இதில் முற்றிலும் மாறுபட்டவராக தேவர் விளங்கினார். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்து விடுவார். மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைக்கும்.

எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரை, படத்துக்கு உரிய பணத்தை மொத்தமாகக் கொடுப்பதுடன், அடுத்த படத்துக்கு உரிய பணத்தையும் சேர்த்துக்கொடுத்து விடுவார், தேவர். அதாவது, ஒரு படத்துக்கான தொகை அட்வான்சாகவே இருந்து கொண்டிருக்கும்.

இதன் காரணமாக ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது ரிலீஸ் ஆகும் தேதியையும் தேவர் அறிவித்து விடுவார். அதே தேதியில் படம் நிச்சயம் ரிலீஸ் ஆகிவிடும்.

தேவர் படங்களிலேயே எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த போது, சில பெரிய படக்கம்பெனி அதிபர்கள், எம்.ஜி.ஆரை அணுகி, தங்களுடைய படங்களிலும் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கும் `கால்ஷீட்' கொடுக்கவேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

எனவே, எம்.ஜி.ஆர். இல்லாமல் சில படங்களைத் தயாரிக்க தேவர் முடிவு செய்து, அதற்கென்றே 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படக்கம் பெனியைத் தொடங்கினார். இந்தப் படக்கம்பெனி சார்பில் பல்வேறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், பக்தி கலந்த சமூகப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

இவற்றில் ஏவி.எம்.ராஜன், சவுகார்ஜானகி நடித்த துணைவன் (1969), ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா நடித்த 'தெய்வம்' (1972), சிவகுமார், ஜெயசித்ரா நடித்த 'வெள்ளிக்கிழமை விரதம்' (1974) ஆகியவை மாபெரும் வெற்றிச் சித்திரங்கள்.

'தெய்வம்' படத்தில், பக்தர் பிரமுகர் கிருபானந்தவாரியார் நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைப்பில், பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய இசைக் கலைஞர்கள் பாடினார்கள்.

எம்.ஜி.ஆருக்கும், தேவருக்கும் இருந்த நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவர் பிழைத்து வீடு திரும்புவாரா, மீண்டும் படங்களில் நடிப்பாரா என்று பட அதிபர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தபோது, தேவர் அகஸ்தியர் கோவிலில் பூஜை செய்துவிட்டு பிரசாதத்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டுபோய் கொடுத்து, 'முருகா! என் அடுத்த படத்தில் நீங்கள்தான் நடிப்பீர்கள். இதோ அட்வான்ஸ்!' என்று கூறியபடி லட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு வந்தார்.

தேவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தார், எம்.ஜி.ஆர்.

Popular Posts

Pages

Popular Posts