Total Pageviews

Sunday, March 18, 2012

தமிழாய்வின் தற்காலநிலை.

 
 
இன்றைய தமிழாய்வு எதை நோக்கிச் செல்கிறது ?
வளர்ச்சியையா?அழிவையா?
பட்டத்தையா? பணத்தையா?

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவது போலவும் குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போலவும் தமிழ் தமிழாய்வாளர்களிடம் சிக்கிக் கொண்டு பாடாய் படுகிறது.
இன்றைய தமிழாய்வு குறித்து கவிஞர் வைரமுத்து
குறிப்பிடும் போது

 பெரும்பாலும் ஆய்வுகள் இங்கே மேற்கோள் நிரப்பிய வைக்கோல்கள்

 கம்பராமாயணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களைத் தேடிக்கொண்டிருக்கும் இலக்கணப் புலிகள்

 அகநானூற்றில் மார்க்ஸியம் தேடிக்கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள்.

 மதுரை வீதியில் கண்ணகி திருகி எறிந்ததைத் தேடிக்கொண்டிருக்கும் கசாப்புக்கடைக்காரர்கள்.

 சித்தர் பாடல்களில் உள்ளார்ந்த ஒளியை மறந்துவிட்டு அதன் சத்தங்களை ஆராய்ச்சி செய்யும் சப்தப் பித்தர்கள்.

 ஓர் ஆராய்ச்சி என்பது அலசிப்பார்த்து முடிவு சொல்ல வேண்டாமா?

 விடியாத தமிழ்நாட்டில் வெளிச்சம் கொளுத்த வேண்டாமா?

 இதை விட்டு விட்டு 'மன்னன்;' என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனைமுறை பயின்று வந்தது?

 மலைநாட்டு மயில் எத்தனை முறை ஆடியது?

 சங்ககாலக் குரங்கு எத்தனை பழம் தின்று கொட்டை போட்டது?
இவையெல்லாம் ஆராய்ச்சிகளே இல்லை என்று மனம் நொந்து குறிப்பிடுகிறார்.இன்றைய தமிழாய்வை எண்ணும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் …………… என்றுதான் தோன்றுகிறது.

இன்றைய சூழலில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் செய்யப்படும் ஆய்வேடுகள் வணிகமயமாகிவிட்டன.

ஆம் ஐய்ந்தாயிரம் ரூபாய்க்கு எம்பில் ஆய்வேடுகளும்

பத்தாயிரம் ரூபாய்க்கு முனைவர் பட்ட ஆய்வேடுகளும் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

அன்றைய சூழலில் உ.வே.சாமிநாதையர் போன்ற கல்விப்புலம் சாராத ஆய்வாளர்கள் பலரும் எந்தப்பட்டங்களை எதிர்பார்த்தும் தமிழாய்வு செய்யவில்லை ஆனால் இன்று கல்விப்புலம் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகளின் நிலை மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளது.


No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts