விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர், தமிழ்நாடு">தமிழ்நாட்டில் பொதுவாகச் சென்னை">சென்னையில் நாளுக்கு நாள் அவ்வப்போது நிகழும் காட்சிகளைத் தழுவியே நகைச்சுவைக் காட்சிகளை அமைக்கின்றார். இவரது நகைச்சுவை, இலஞ்சம் (இன்னமும் எழுதப்படவில்லை)">இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம் (இன்னமும் எழுதப்படவில்லை)">மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். இவர் பெரும்பாலும் நகரப் பகுதிகளிலேயே பிரபலமாக உள்ளார். கிராமப் பகுதிகளில் , கவுண்டமணி">கவுண்டமணி , செந்தில்">செந்தில் ஆகிய நகைச்சுவை நடிகர்கள் பிரபலமாகவுள்ளனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரைஉலகில் நடிக்கத் தொடங்கிய இவர், இப்போது பிரபல நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள்,சாமி,ரன் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.
No comments:
Post a Comment