நேதாஜி அவர்கள் முதல் முறையாக
ஹிட்லரை சந்திக்க சென்ற
பொது ஹிட்லருடைய ஆட்கள்
நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் .
நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க
ஆரம்பித்து விட்டார் .
ஹிட்லருடைய ஆட்கள்
ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .ஹிட்லர்
போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும்
நேதாஜி கண்டுகொள்ளாமல்
படிப்பதை தொடர்ந்தார் .
( இதில் என்ன விஷயம்
என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற
வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள்
தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக
சொல்லியிருக்கிறார்கள் )
கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின்
தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள்
"ஹிட்லர் " என்றார் .
ஹிட்லருக்கு ஒரே வியப்பு !
ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள்
என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள்
என்னை சந்தித்தது கிடையாது "
என்று கேட்டார் .
நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ்
சந்திர போசின் தோளில் கை வைக்க
ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம்
கிடையாது" என்றார்..!
No comments:
Post a Comment