இந்த வருட தேவர் ஜெயந்தியையும்
வெற்று கோசங்களாக ஆக்காதீர்கள்.
1) எல்லா சமுதாய மக்களையும் இணைத்து கொண்டாடுங்கள்
பசும்பொன் தேவர் அய்யாவின் ஆன்மீகத்தை அரசியலை,தியாகத்தை மற்றவர்களுக்கும்
புரிய வைக்கும் புரிதல் விழாவாக மாற்றுங்கள்.
2) மறந்தும் மது அருந்தி பசும்பொன் செல்லாதீர்கள்.
3) போகும் வழியில் மற்றவர்கள் அருவருக்கும் வகையில் கோசம் இடாதீர்கள்.
4) செல்லும் வழியில் எந்த
சமுதாயத்தையும் இழிவாக பேசாதீர்கள்.
5) ரத்ததான முகாம் நடத்துங்கள்
6) உங்கள் பகுதியில் முடிந்த அளவில் சிறு சிறு உதவிகள் செய்யுங்கள்.
7) நீங்கள் பசும்பொன் சென்றாலும் வீட்டில் உள்ள பெண்களை பொங்கல் வைத்து உங்கள் பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களோடு பகிர்ந்து கொள்ள சொல்லுங்கள்.
"ஞானி" என வாழ்ந்த அந்த
பெருமகனாரின் விழாவை ஆன்மீக விழாவாக மாற்றுவதும், அராஜக விழாவாக மாற்றுவதும் உங்கள் கையில் உள்ளது.
- குமரன் சுப்பைய்யா
No comments:
Post a Comment